Online New Tamil Songs

Find number of tamil songs in one and only exclusive portal- Online Tamil New song collections. Here you can find Tamilsongcollections, Tamil song collections, tamil new songs, tamil songs download, online tamil songs, online new tamil songs

New Tamil Songs

Find number of tamil songs in one and only exclusive portal- Online Tamil New song collections. Here you can find Tamilsongcollections, Tamil song collections, tamil new songs, tamil songs download, online tamil songs, online new tamil songs

Tamil Song Collections

Find number of tamil songs in one and only exclusive portal- Online Tamil New song collections. Here you can find online tamil new songs, tamil new songs, tamil songs download, online tamil songs, online new tamil songs

Online Tamil Songs

Find number of tamil songs in one and only exclusive portal- Online Tamil New song collections. Here you can find online tamil new songs, tamil new songs, tamil songs download, online tamil songs, online new tamil songs

Friday, January 31, 2014

Rummy Tamil Mp3 Songs



Wednesday, January 15, 2014

Jilla Tamil Mp3 Songs - Free Download



Veeram Mp3 Songs - free download



Friday, January 10, 2014

Veeram Movie Review

 அஜித் நடிப்பில் இதுவரை பொங்கலுக்கு வெளியான தீனா’, ‘ரெட்’, ‘பரமசிவன்’, ‘ஆழ்வார்’ ஆகிய படங்களில் தீனா’ மட்டுமே மெகா ஹிட்! மற்ற எதுவும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. அதேபோல் விஜய்யுடன் நேரடியாக மோதிய படங்களான ஆஞ்சநேயாவும், ‘ஆழ்வாரும் தோல்விப் படங்களாக அமைந்தன. இதனாலேயே இந்தப் பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லாவுடன் வெளியாகும் வீரம்’ படத்தை தல ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அஜித் முதல்முறையாக நடித்துள்ள முழுநீள கிராமத்து படம் என்பதாலும் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருக்கிறது வீரம்’. ரசிகர்களின் இத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துள்ளதா இந்த வீரம்’. கடைசி வரியில் இதற்கான பதிலை பார்ப்போம்.

படத்தின் கதைப்படிஅஜித்துக்கு விதார்த்பாலாமுனீஸ்சுகைல் என நான்கு தம்பிகள். இவர்கள் ஊருக்குள் எப்போதும் அடிதடியோடு வீரமாக சுற்றிக் கொண்டிருப்பவர்கள். இதற்காகவே போலீஸ் கேஸ்களை கவனிக்க வக்கீல் சந்தானத்தை குடும்ப வக்கீலாக வைத்திருப்பவர்கள். தான் கல்யாணம் செய்துகொண்டால் தம்பிகளை பிரிந்து விடுவோம் என திருமணம் செய்யாமல் வாழ்கிறார் அஜித். ஆனால்தம்பிகள் மூன்று பேர்சந்தானம் என அனைவரும் காதலில் விழஎப்படியாவது அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தால்தான் நமக்கும் திருமணம் நடக்கும் என தம்பிகள் திட்டம் போடுகிறார்கள். அதனால் தமன்னாவையும்அஜித்தையும் காதலிக்க வைக்க படாதபாடு படுகிறார்கள். அதோடு அடிதடிக்கு பேர் போன இவர்களுக்கு எதிரிகளாலும் சில பிரச்சனைகள் முளைக்கின்றன. கடைசியில் தமன்னாவுடன் அஜித் கைகோர்த்தாராஎதிரிகளை அஜித் என்ன செய்தார்என்பது மீதிக்கதை.

கிட்டத்தட்ட 54 படங்களில் அஜித் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் தான் முழு படத்திலும் வெள்ளை மனிதராக (வெள்ளை உடைவெள்ளை மனம்வெள்ளை முடி) வலம் வருகிறார். இப்படி தோன்றவும் தனி தைரியம் வேண்டும். எந்த உடையும் தனக்கு பொருந்தும் என்பதற்கு இவர்தான் உதாரணம். சண்டைக்காட்சிகளில் அதகளம் பண்ணுகிறார். அபார உழைப்பு. ரயில் சண்டையில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். மற்ற படங்களில் மிச்சம் விட்ட காமெடிசென்டிமென்ட் போன்றவற்றை இந்த படத்தில் பிடித்துள்ளார்.

மூன்று வருடத்திற்குப் பிறகு தமிழில் நடிக்கும் தமன்னாஇந்தப் படத்தில் அழகுச்சிலையாக வலம் வருகிறார். அஜித்துக்கும்இவருக்கும் பொருத்தம் ஜோர். பாடல் காட்சிகளில் கவர்ச்சிகுளிர்ச்சி. மற்ற காட்சிகளில் குடும்பப்பாங்கு. நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை.

தம்பிகளாக விதார்த்துக்கும்பாலாவுக்கும் நிறைய வாய்ப்பு. மற்றபடி சுகைலும்முனிஷும் படம் முழுக்க வந்தாலும் நடிக்க வாய்ப்பு குறைவுதான்.

சந்தானம் கலகல காமெடி. என்றென்றும் புன்னகை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் தன் திறமையை நிரூபித்துள்ளார். நாசர்பிரதீப் ராவத்அதுல் குல்கர்னிரமேஷ் கண்ணாஇளவரசு என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஓபனிங் பாடலும்தீம் மியூசிக்கும் ஆக்ஷன் படத்துக்கே உரித்தான சூட்டை கிளப்புகிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம். ஆனால்ஒளிப்பதிவாளர் வெற்றி அதை படம் பிடித்த விதத்தில் பாடல்களை காப்பாற்றி இருக்கிறார். இருந்தாலும் பாடல்களில் தெலுங்கு வாடை அதிகம்.


சிறுத்தை’ என்ற ரீமேக் படத்தை இயக்கிய சிவாவுக்குஅந்த வெற்றியால் கிடைத்த படம்தான் வீரம்’. அஜித்தை கிராமத்து பாத்திரத்தில் எப்படி காட்டப் போகிறார் என்று நினைத்த அனைவரையும் சூப்பர்’ என்று சொல்ல வைத்து விட்டார். சரியான விதத்தில் காமெடிசென்டிமென்ட்ஆக்ஷன் என கலந்துசுவாரஸ்யமான திரைக்கதையை அமைத்துள்ளார். தல’ ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வீரம்’ படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா அஜித்தின் உதவியுடன்!

Thursday, January 9, 2014

Jilla Movie Review



Directed by : R.T.Neason
Produced by : R. B. Choudary
Written by : R.T.Neason
Starring : Mohanlal, Vijay, Kajal Aggarwal, Mahat Raghavendra, Niveda Thomas
Music by : D. Imman
Cinematography : Ganesh Rajavelu
Distributed by : Gemini Film Circuit, Maxlab Entertainments, Ayngaran International, FiveStar International, ATMUS Entertainments


ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு வாக்குறுதியை காப்பாற்றுகிறார். பூர்ணிமாவின் மகன் தான் இளைய தளபதி விஜய். பிற்பாடு மோகன்லாலுக்கும் அவருக்கும் இன்னொரு உருப்படாத மகன் பிறக்கிறான். மகத்.
அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மாநில அளவில் பெரிய மனிதராகிறார் மோகன்லால். கட்டிவர சொன்னால் வெட்டிவர தயாராக வளர்ந்து நிற்கிறார் விஜய். ஆனால் மகத்தோ வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு, கண்ணில் படும் பெண்களை ரேப் செய்துக்கொண்டு, டோபு அடித்துக்கொண்டு வெளங்காவெட்டியாக உருவெடுக்கிறார்.
அரசியலில் விஜய்க்கு மோகன்லால் முக்கியத்துவம் கொடுப்பதை ஆரம்பத்திலிருந்தே மகத் விரும்பவில்லை. இளைஞரணித் தலைவர் பதவியை விஜய்க்கு தருவதை கடுமையாக எதிர்க்கிறார். ஆனாலும் மோகன்லால் விஜய்யைதான் அரசியலில் வளர்க்க விரும்புகிறார். ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்று அப்பா தன்னை வெறுப்பதாக கருதிக்கொள்ளும் மகத் , கடுப்பாகி ஹாஃப் ஹாஃபாக சரக்கடித்து, ஃபுல் போதையில், மோகன்லாலிடம் பணிபுரியும் பாஷா என்பவரின் மகளை கதறக் கதற…
இந்த அடாத செயலுக்காக மகத்தை தண்டிக்க வேண்டுமென்று விஜய் போர்க்கொடி தூக்குகிறார். விஜய்யை போட்டால்தான் தான் உயிரோடு இருக்க முடியுமென்று மகத் அவர் மீது கொலைமுயற்சியை நடத்துகிறார். விஜய் இதிலிருந்து தப்பிக்க, மிருகமாக மாறிவிட்ட மகத் என்ன செய்கிறோம் என்பது புரியாமல் பூர்ணிமாவின் மகளையும் (அதாவது விஜய்க்கு டைரக்ட், மகத்துக்கு இன்டைரக்ட் அக்காவை), அவரது கணவரையும்கூட போட்டுத் தள்ளிவிடுகிறார். அக்காவை இழந்த விஜய் எரிமலையாய் வெடிக்கிறார். தன்னுடைய மகளை கற்பழித்துக் கொன்ற மகத்தை ஒழிக்க வேண்டுமென்று விஜய்யோடு மோகன்லாலின் நம்பிக்கைக்குரிய சகாவான பாஷாவும் கரம் கோர்க்கிறார். மகத்தை போட்டுத் தள்ளுகிறார் விஜய்.
தூங்கிவிடாதீர்கள். ட்விஸ்ட் மிச்சமிருக்கிறது.
இதுவரை படத்தில் காட்டப்பட்டது மாதிரி மோகன்லால் அவ்வளவு பெரிய யோக்கிய கொண்டையெல்லாம் கிடையாது. தன் ரத்தத்தில் பிறந்த மகனான மகத்தை நன்றாக வாழவைக்க, விஜயை ஒரு பலியாடாகதான் வளர்த்துக் கொண்டிருந்தார். விஜய்யின் ஒரிஜினல் தந்தை அரசியல் கலவரத்தால் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டதும் பொய். அவரை கொன்றவரே மோகன்லால்தான் என்று பழைய கதைகளை தெரிந்த பாஷா சொல்கிறார்.
க்ளைமேக்ஸ்.
மோகன்லாலை பார்க்க வருகிறார் விஜய். இவரை எதிர்கொள்ள முடியாமல் கூசிப்போகும் மோகன்லால், “நல்லவன், கெட்டவன் பாகுபாடெல்லாம் உலகத்தில் இல்லை. இலட்சியங்களை அடைய அனைவரும் சிறு சிறு தவறுகளை செய்தவர்கள்தான்” என்று தன்னுடைய கடந்தகால தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். விஜய்யிடம் தன்னுடைய பழைய விஷயங்களை எல்லாம் போட்டு கொடுத்துவிட்ட பாஷாவை போட்டுத் தள்ளுமாறு ஆணையிடுகிறார். அதை மறுக்கும் விஜய், மோகன்லாலின் காலில் விழுந்து வணங்கி “யார் என்ன சொன்னாலும் நீ மட்டும்தான் என் அப்பா. என்னோட ஒரிஜினல் அப்பன் இப்போ உயிர்பிழைச்சி வந்தாலும் கூட, உன்னைதான் என் அப்பனா ஏத்துப்பேன். ஏன்னா நீ என்னை அப்படி வளர்த்திருக்கே” ரேஞ்சுக்கு எட்டு, பத்து நிமிஷத்துக்கு முழம் முழமாய் செண்டிமெண்டை கொட்டி வசனம் பேசுகிறார். அவரும், பாஷாவும் சில்லவுட்டாக தனியாக இருக்கும் மோகன்லாலை விட்டுக் கிளம்புகிறார்கள்.
இளைய தளபதியின் லாங் டயலாக்கை கேட்டு உலகத்தையே வெறுத்துவிட்ட மோகன்லால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகிறார்.
2007ல் ‘பிரஸ்தானம்’ என்கிற பெயரில் சாய்குமார், சர்வானந்த் நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் இது. தமிழில் இதுதான் ‘ஜில்லா’வாகிறது. பாலகிருஷ்ணாவின் ஆல்டைம் ப்ளாக்பஸ்டரான ‘சிம்மா’ ரிலீஸ் ஆன தேதியில் பிரஸ்தானமும் ரிலீஸ் ஆகித் தொலைத்ததால் படுதோல்வி அடைந்தது. வேறு தேதியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் தோல்வி அடைந்திருக்கும். சாய்குமாரின் நடிப்பு மட்டும் நன்றாக பேசப்பட்டது. அவருக்கு அவ்வருடத்துக்கான ஃபிலிம்பேர், நந்தி விருதுகள் இப்படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. சில காலம் முன்பு இப்படம் ‘பதவி’ என்கிற பெயரில் டப் ஆகி தமிழிலும் ரிலீஸ் ஆனது. வந்த சுவடே யாருக்கும் தெரியவில்லை.
பின்னணி இப்படியிருக்க, ‘வேலாயுதம்’ ஷூட்டிங்கில் ஜெயம் ராஜாவின் உதவியாளராக இருந்த நேசன் சொன்ன மதுரைப் பின்னணி கதை ரொம்பவும் பிடித்துப்போய் ‘ஜில்லா’வில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டதாக கதையளக்கிறார்கள். தெலுங்கு ரீமேக் என்று சொல்லிக் கொள்வதற்கு என்ன தயக்கமென்று தெரியவில்லை. தெலுங்கில் ஹீரோவுக்கு ஜோடியில்லை. இதில் சேர்த்திருக்கிறார்கள் போல. நேசன் ஏற்கனவே ‘முருகா’ என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார். விஜய்க்கு நல்ல ஸ்க்ரிப்ட் கேட்க தெரியவில்லை. தமிழில் விஜய் நடித்தால் ஷ்யூர் ஹிட் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஏராளமான படங்கள் சமீபமாகவே தெலுங்கில் வந்திருக்கின்றன. அப்படியிருக்கையில் அரதப்பழசான சப்ஜெக்ட்டுகளை ஏன்தான் குறிவைத்து தேர்ந்தெடுக்கிறாரோ தெரியவில்லை.